×

பவானி அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி காத்திருப்பு போராட்டம்

பவானி, ஜன.29: பவானி அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் காத்திருப்புப் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பெண்களின் பாதுகாப்பு கருதி பவானி அருகே மயிலம்பாடி போத்தநாயக்கன்புதூரில் உள்ள டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து மாவட்ட கலெக்டரிடம் புகார் மனுவும் அளித்தனர். மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார்.இதையடுத்து டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் கடையே சுற்றி 15 அடி உயரத்திற்கு தடுப்பு அமைக்கப்பட்டு மது விற்பனை தொடர்ந்து நடந்தது. பார் உள்ள பகுதியில் கம்பி வேலி போடப்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த போத்தநாயக்கன்புதூர் மக்கள் டாஸ்மாக் கடையை மூடும் வரை தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.
இவர்களுக்கு கொமதேக  வடக்கு மாவட்டச் செயலாளர் துரைராஜா நிர்வாகிகளுடன் வந்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.
பவானி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags : Taskmak ,shop ,Bhavani ,
× RELATED செயற்கை முறையில் பழங்களை பழுக்க வைத்த 3 கடை உரிமையாளர்களுக்கு அபராதம்